assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Tuesday 27 September 2011

ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
TUESDAY, 27 SEPTEMBER 2011 12:16
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.

கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.

அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.

தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.

புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


, 27 SEPTEMBER 2011 22:18 )

Monday 16 May 2011

என் தோல்விக்காக கலங்காதீர்கள்-எம்.தமிமுன் அன்சாரி

அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.


எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.


தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.


சென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல... தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.


அங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.


தினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.


எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.


தேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.


ஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.


குடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.


கூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.


சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.


நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்கள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.


இன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.


என் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.


போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும்! நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே... அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.


அருமை தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அருமை நண்பர் அஸ்லம் பாஷாவும் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.


என் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.


ஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து மெல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.


அன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள்.


நமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


மேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


நான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.


என் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.


மீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.


காமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.


குறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.


வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.


உங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.


ஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.


எனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.


கலைஞர் குடும்பத்தையும், ரவுடிகளையும், அதிரவைத்த ஒரு தமுமுக தொண்டன், மமக ஊழியன் என்ற பெருமிதத்தோடு என் அடுத்தகட்டப் பயணம் தொடரும். இன்ஷாஅல்லாஹ்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறுதி வெற்றி நமது அணிக்கே!


அல்லாஹ் நமக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது (அல்குர்ஆன் 9:51)


மூமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)

அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

மனிதநேய மக்கள் கட்சி வெற்றி. இறைவனுக்கு நன்றி (Video)

மனிதநேய மக்கள் கட்சி வெற்றி. இறைவனுக்கு நன்றி.

உரை. பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.ஏல்.ஏ தமுமுக தலைமையகத்தில் ஆற்றிய உரை.

Friday 13 May 2011

இராமநாதபுரத்தில் ம.ம.க வெற்றி


இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் அலியை விட 15,849 ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்று வெற்றிப் பெற்றார். அல்ஹம்து லில்லாஹ்.

ஆம்பூரில் ம.ம.க வெற்றி



E-mailPrintPDF
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் வேட்பாளர் ஏ.அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி (அல்ஹம்துலில்லாஹ்)

ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பி.ஏ(சி.எஸ்) படித்த அஸ்லம் பாஷா த.மு.மு.கவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறார்.

2006ல் மாவட்ட துணைச் செயலாளராகவும் 2007 ல் மாவட்ட செயலாளராகவும்இ 2009 முதல் வேலூர் (மேற்கு) மாவட்ட தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மனித உரிமைகளில் மிகுந்த நாட்டம் கொண்ட அஸ்லம் பாஷா அப்பகுதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தமிழ்இ உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளார்

Saturday 30 April 2011

ததஜ பொதுகூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தை தரைகுறைவான வார்ததைகளால் பேசியதால் பொது மக்கக் ஆவேசம் கோவையில் கலவரம் பதட்டம் போலீஸ் குவிப்பு !


கோவையில் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் காங்கிரஸ்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மோடையில் தமுமுக மற்றும் மமக வை அதுபோல் எஸ் டி பி ஐ தராகுறைவான வார்த்தைகளால் பேசியதை கண்டித்து கோவை பொது மக்கள் ஆவேசம் அடைந்தார்கள். பிறகு 5000க்கு மேற்பட்டறோர்கள். அனைத்து இஸ்லாமியா பொதுமக்கள் ஒன்றுகூடி பிரச்சார மேடை நோக்கி சென்று பேச்சை நிறுத்த சொல்ல பிரச்சனை துவங்கிவிட்டது. அங்கும் இங்கும் கை வைக்க துவங்கிவிட்டார்கள். கலவரம் வெடிக்க தகவல் தெரிந்து அனைத்து இயக்க சகோதரர்கள் பொது மக்கள், ஜமாத்தார்கள்ஒன்று கூடி இவர்களுக்கு ஒரு படம் புகட்ட வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். ததஜ நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் கோவை கரும்புகடை பகுதிய்ல் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் நடந்தது. தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு மற்றும் 1000க்கு மேற்பட்ட போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு வந்து தமுமுக, மமக, மற்றும் எஸ் டி பி ஐ அதுபோல் ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்ததை நடத்தி ததஜவினர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு கலைந்து சென்றார்கள். முழு செய்திகள் விரைவில்.....


ததஜ பிரச்சார மேடையை நோக்கி .....பொது மக்கள் தாக்க வந்த போது....

ததஜ சேர்ந்த நிர்வாகிகளை பொதுமக்கள் தாக்கியபோது பலத்த கயத்துடன் ததஜ தொண்டர்கள்....



ததஜ நிர்வாகிகள் மற்றும் ததஜ மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வையும் கைது செய்ய தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட், மமக, எஸ் டி பி ஐ, மற்றும் ஜமாத்தார்கள் பொது மக்கள் சாலை மறியல் நடந்த போது.....



கோவை மாநகர காவல்துறை ஆனையாளர் சைசேந்திரா பாபு அவர்கள் மமக மாவட்ட நிர்வாகியிடம் பேச்சு வார்த்தை செய்த போது....

மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் அபுதாஹிர் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்...
பாப்புலர் ஃ பிரண்ட் மற்றும் எஸ் டி பி ஐ மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் சாலை மறியல் செய்த போது....

செய்தி, புகைபடம் : கோவை தங்கப்பா