assalamualaikkum
Tuesday 29 March 2011
Monday 21 March 2011
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.
-ம.ம.க தலைமையகம்
-ம.ம.க தலைமையகம்
Monday 14 March 2011
ஒரு நாள் வரும்!
ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய்
உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடை அணிய மாட்டாய் !
உனக்கு அணுவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய் !
உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள்.
நீ தொழ மாட்டாய் !
உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் !
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
அன்று உன்னை தனியாக விட்டு விட்டு
உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள்.
அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள். .
Monday 7 March 2011
சிறையில் அடைத்தார் கலைஞர்-நக்கீரனில் தமுமுக தலைவர் பேட்டி
அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், ""முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது,
""தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967-ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான். இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால்... தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டுகொள்ளப்படவேயில்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறை யால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது.
எங்கள் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.
உதாரணத்திற்கு... பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல் ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம் நடத்து வது வழக்கம். ஆனா போராட் டத்திற்கு இரண்டு நாட் களுக்கு முன்பிருந்தே "முன் னெச்சரிக்கை' என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெய லலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்த தில்லை.
தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர் களும் உடைமைகளும் சூறை யாடப்பட்டன.
காவிகளும் காக்கிகளும் கண்மூடித்தனமாக முஸ்லிம் களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, "குண்டு வைத்தார்கள்' என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம் கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.
மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான் கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர். தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை.
கடந்த காலங்களிலும் சரி... தற்போதும் சரி... முஸ்லிம் கட்சி களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்... அனுமதிக்கிற வர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்'' என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹி ருல்லா.
""தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967-ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான். இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால்... தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டுகொள்ளப்படவேயில்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.
இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில் முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறை யால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது.
எங்கள் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.
உதாரணத்திற்கு... பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல் ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம் நடத்து வது வழக்கம். ஆனா போராட் டத்திற்கு இரண்டு நாட் களுக்கு முன்பிருந்தே "முன் னெச்சரிக்கை' என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெய லலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்த தில்லை.
தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர் களும் உடைமைகளும் சூறை யாடப்பட்டன.
காவிகளும் காக்கிகளும் கண்மூடித்தனமாக முஸ்லிம் களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, "குண்டு வைத்தார்கள்' என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம் கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.
மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான் கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர். தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை.
கடந்த காலங்களிலும் சரி... தற்போதும் சரி... முஸ்லிம் கட்சி களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்... அனுமதிக்கிற வர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்'' என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹி ருல்லா.
நன்றி - நக்கீரன் வாரமிருமுறை
Saturday 5 March 2011
The AIADMK on Sunday entered into an electoral understanding with the Manithaneya Makkal Katchi (MMK) by allotting three seats to the party.
M.H. Jawahirullah, convenor of the MMK, the political wing of the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), met AIADMK general secretary Jayalalithaa at her Poes Garden residence and signed the agreement for seat-sharing.
“We have decided to contest on our own symbol and we will soon approach the Election Commission in this regard,” Mr. Jawahirullah told The Hindu.
He said MMK would also contest one seat in Puducherry as part of the AIADMK alliance and the agreement for the same would be signed later.
Asked whether he was happy with the allocation of three seats, Mr. Jawahirullah said he had no complaints because Ms. Jayalalithaa was keen on cobbling together a mega alliance.
“Our objective is to defeat the corrupt DMK government driven only by nepotism,” he said.
Mr. Jawahirullah was accompanied by TMMK president S. Hyder Ali, MMK general secretary P. Abdul Samad, treasurer S.S. Haroon Rashid and others.
Earlier in the day, CPI leaders led by its State secretary D. Pandian held talks with the AIADMK's three- member committee on seat-sharing.
“The talks went on smoothly and it is for the AIADMK leadership to finalise the agreement,” Mr. Pandian said.
மங்கலத்தில் 93வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஒன்றியம் சார்பில் 93-வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்டத் தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.
Wednesday 2 March 2011
பாண்டாரவாடை ஊராட்சித் தலைவர் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி
தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு
நடைபெற்ற இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிப்
பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்பு சின்னத்தில் இத்தேர்தலில்
போட்டியிட்ட கமருஸ்ஸமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி
வேட்பாளர் அசோகனை 254 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெரும்
அளவில் பெற்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி அடைந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிப்
பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்பு சின்னத்தில் இத்தேர்தலில்
போட்டியிட்ட கமருஸ்ஸமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி
வேட்பாளர் அசோகனை 254 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி பல தரப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெரும்
அளவில் பெற்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றி அடைந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)