assalamualaikkum

அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)    சூலூர்  த.மு.மு.க .  மற்றும்  மனிதநேய மக்கள் கட்சி  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது.      சூலூர்  த.மு.மு.க .  தலைவர் -  S .H .அஹமது ஸாலிஹ் -  செயலாளர் -   M.அன்சாரி -  பொருளாளர் -  K.A.M.அக்பர்அலி  ............  சூலூர்  மனிதநேய மக்கள் கட்சி -  தலைவர் - அஹமது ஸாலிஹ் -  செயலாளர் - அப்துல் கனி -  பொருளாளர் - அக்பர் அலி

Sunday 27 February 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி




20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.








கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?






பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.



“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.




கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?




பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.





கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?




பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.





கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..




பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!




கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..




பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.




கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...




பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.


கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...




பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.




பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)




கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?




பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.



தேர்தல் நிதி தாரீர்


தேர்தல் நிதி தாரீர்


தேர்தல் நிதி தாரிர்


சமுதாய கண்மணிகளே...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


நீங்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.


எழுச்சியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கிய பொதுக்குழுவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் சந்தித்து, ஆரத்தழுவி, நலம் விசாரித்து சிலமணி நேரங்கள் ஒரு குடும்பமாய் கூடி நின்ற அந்த தருணங்களை விவரிக்காமல் இருக்க முடியாது!




அல்ஹம்துலில்லாஹ்...


நமது பொதுக்குழு என்பது நம் பேரியக்கத்தின் திருவிழாவாகும். நமது பலம் பன்மடங்குகளாகப் பெருகி, ஆயிரக்கணக்கான புதிய கிளைகள் உருவாகியிருப்பதால் இப்போதெல்லாம் நமது பொதுக்குழுக்கேற்ற மண்டபங்கள் எங்கும் அமையப் பெறுவதில்லை.


அதனாலேயே திடல்களைக் கண்டறிந்து அங்கே பந்தலை அமைத்து பொதுக்குழுவை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இதனால் பெரும் செலவுகள் ஏற்படுகிறது என்றாலும், உங்களையெல்லாம் ஒன்றாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறதே எனும்போது, சிரமங்களும் செலவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.


பொதுக்குழுவில் எங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா? என ஏராளமான சகோதரர்கள் எழுப்பிய ஏக்கம் நிறைந்த கேள்விகளும், எங்களை இனிய சங்கடங்களுக்கு உள்ளாக்கியதையும் இந்நேரத்தில் நினைவுகூர வேண்டியிருக் கிறது.


அவர்களுக்கெல்லாம் ‘அனுமதி இல்லை’ என்ற இரண்டு வார்த்தைகளை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் கனத்த இதயத்தோடு மறுத்தோம்.


எல்லோரும் நமது கொள்கை தங்கங்கள்தான். இயக்கத்தில் முழுநேரமாய் பணியாற்றியவர்கள்தான். மறுக்க முடியாது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டவர்களையும் மட்டுமே கொண்ட பொதுக்குழுவின் விதிகளை தளர்த்தினால், அதனால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.


சிறப்பு அழைப்பாளர்களாகவாவது அனுமதியளியுங்கள் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கும் ஒரு எண்ணிக்கை வரையறை உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


எனவே, பொதுக்குழுவுக்கு வரமுடியாத, அல்லது அனுமதி மறுக்கப்பட்ட நமது தங்க மனமும், கொள்கை உரமும் கொண்ட சகோதரர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அடுத்த பொதுக் குழுவில் பங்கேற்கும் வகையில், நிர்வாக ரீதியாக இடம்பெறும் வகையில் தங்களின் இயக்க ஈடுபாட்டை இன்னும் கூடுதலாக செய்திட வேண்டும் என இந்நேரத்தில் மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


கண்மணிகளே...!


நாடே எதிர்பார்க்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கிறது. மார்ச் 1 முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. நமது மனிதநேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கிறது.


சமுதாய சிந்தனையாளர்கள், சகோதர அமைப்புகள், உலமாக்கள், ஜமாஅத்தார்கள் என பலரும் நமது சட்டமன்ற நுழைவை பெரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். எப்படியும் இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக நுழைந்துவிட வேண்டும் என பிரார்த்தித்த வண்ணம் உள்ளனர்.


பலர் நமது கூட்டணி நிலைப்பாட்டை நேரடியாக ஆதரிக்கிறார்கள். இன்னும் பலர், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; எப்படியாவது உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றிவாகை சூடுங்கள் என வாழ்த்துகிறார்கள்.


நாம் முன்பே எடுத்த தேர்தல் நிலைப் பாடு, நமது பிரச்சாரப் பணிகளை எளிமையாக்கியிருக்கிறது என்பதை உணர்கி றோம். வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்களும் இதுபோன்ற அனுபவத்தையே செய்திகளாக நமக்குத் தந்தவண்ணம் உள்ளனர்.


கண்மணிகளே...!


நம்மைத் தோற்கடிக்க வீறுகொண்டு வேலை செய்வோம் என ஒரு சிறு கூட்டம் சபதம் செய்திருப்பதாக அறிகிறோம். ஒரு சிறு கூட்டம் என்பதைவிட, அவர்களை வழிநடத்தும் ஒருவரின் நிலைப்பாடுதான் அது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


நம்மைத் தோற்கடிக்க வேண்டும் என பாஜக, இந்துமுன்னணி போன்றவர்கள் சபதம் ஏற்றால் அது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், தங்களையும் ‘கலிமா’ சொன்னவர்கள் என கூறிக்கொள்பவர்கள் இத்தகைய நிலைப் பாடுகளை மேற்கொள்வதுதான் பரிதாபத்துக் குரியதாக இருக்கிறது.


அவர்கள் நம்மை எதிர்ப்பதே நமக்கு கூடுதல் பலம் என்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.


இவர்களது நிலைப்பாட்டை நமது சமுதாய மக்கள் நிராகரிக்கப் போவது உறுதி என்பதை இன்ஷாஅல்லாஹ் தேர்தல் களம் உணர்த்தப் போகிறது. தூய எண்ணத்தோடு களமாடும் நமக்கு அல்லாஹ்வின் பேருதவி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.


கண்மணிகளே...!


தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்த தைவிட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாக வும் கிடைக்கலாம். நமது கூட்டணிக்கு பலம் வாய்ந்த புதிய கட்சிகள் எல்லாம் வரும் நிலையில் நாம் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. அரசியல் ராஜதந்திர த்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.


கண்மணிகளே...!


நாம் தேர்ந்தெடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சில தொகுதிகளின் பெயர்களை பொதுக்குழுவில் அறிவித்தோம். அங்கெல்லாம் தொகுதி எழுச்சிப் பொதுக்கூட்டங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், சுவர்களை முன்பதிவு செய்தல் என வேலைகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.


இச்செய்திகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் நினைக்கும் போது விழிகள் உறங்க மறுக்கிறது. நுரையீரல் பெருமூச்சை வெளிப்படுத்துகிறது. இதயம் பதற்றமடைகிறது. அது என்ன...? தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறோம்? என்பதுதான் அது. தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எழுப்பப்படும் கவலைக்குரிய கேள்வி இது. நேர்மையாளர்களுக்கு எப்போதும் பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் என்பது நமது அனுபவ உண்மை.


திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவினர் தொடங்கிவைத்த பணநாயக  விளையாட்டு ஜனநாயகத்தை உடைத்திருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் நம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளை ஒழித்துவிட்டு ஒரு கட்சி சர்வாதிகார முறையை தமிழகத்தில் கொண்டு வருவதுதான் அவர்களது திட்டம்!


அவர்களுக்கென்ன... பணத்துக்கா பஞ்சம்? ஸ்பெக்ட்ரம் மூலம் பல்லாயிரம் கோடி; பாலங்கள், சாலைகள் மூலம் பல்லாயிரம் கோடி; இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கோடி, கோடியாய் சுருட்டிய பல லட்சம் கோடிகள் வைக்க இடமின்றி குவிக்கப்பட்டிருக்கிறது.


அவர்களது கூட்டணியில் உரசல்களும், குழிபறிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் சூழலில் அவர்கள் நம்பியிருப்பது ஊழல் பணத்தைத்தான். தேர்தலின் இறுதி நாட்களில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகப் பணம் கொடுத்தாவது; 50 அல்லது 60 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறார்கள். அவர்கள் தோல்வியடையப் போவது உறுதி தான் எனினும், ‘கௌரவமாக’ தோற்க வேண்டும் என்பதற்காக வெறிகொண்டு பணத்தை வாரி இறைப்பார்கள்.


அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதற்காக, நாம் போட்டியிடும் தொகுதிகளில் நாம் முறைகேடான வழிகளில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், செலவு செய்ய வேண்டிய முக்கிய நிகழ்வுகளான விளம்பரம் அமைத்தல், பிரச்சாரம் செய்தல், வாகன செலவு, கூட்டணி கட்சியினரின் அடிப்படை வேலைகளுக்கான செலவுகள், பூத் கமிட்டிக்கான ஏற்பாட்டு செலவு, மீடியாக்களுக்கான செலவுகள் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவையெல்லாம் தவிர்க்க முடியாத செலவுகள்.


கண்மணிகளே...!


நமது பேரியக்கம் சாமான்ய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் மட்டுமே நமது பட்டாளத்தில் இருக்கிறார்கள்.


நமது ஒவ்வொரு செயல்பாடுகளிலும், வெற்றிகளிலும் பொதுமக்களிடமிருந்து திரட்டும் நன்கொடைதான் பின்னணியாக இருக்கிறது.


நமக்கு டாட்டாக்களையும், அம்பானிகளையும் தெரியாது. ஆலைகள் நடத்தும் பெரு முதலாளிகளையும் தெரியாது. அன்னிய நாடுகளில் நிதிபெறக் கூடாது என்பதைக் கொள்கையாக வைத்திருப்பவர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் இந்திய சொந்தங்களிடமிருந்து மட்டுமே நன்கொடை களை பெறக்கூடியவர்கள் என்பதெல்லாம் ஊர் அறிந்த உண்மைகள்.


இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் நிதியைத் திரட்ட வேண்டியது மிகமிக அவசரமான பணியாகும். தேர்தல் நேரத்தில் செலவுக்கு பணமிருந்தால் மட்டுமே நிம்மதியாக, சிந்தனை சிதறாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியும்.


எனவே, பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை ஒருமாத காலத்தை தேர்தல் நிதி வசூலிக்கும் காலமாக வரையறை செய்து எல்லோரும் மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்காகப் பணியாற்றும் நமக்கு, மக்களிடமிருந்து பெறும் நிதிதான¢தோணியாகவும், ஏணியாகவும் இருக்க வேண்டும்.


கிளைகள், வார்டுகள், வட்டங்கள் என அடிப்படை நிர்வாக அமைப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் சார்பில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் தேர்தல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களை மிஞ்சும் விதத்தில் நகரம், மாநகரம், பகுதி, ஒன்றியம் சார்பில் ஒருமடங்கு கூடுதல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களோடு மாவட்ட நிர்வாகங்கள் போட்டிபோட்டு நிதி சேகரிக்க வேண்டும்.


சொந்தத் தொழில் நடத்துபவர்களிடமும் செல்வந்தர்களிடமும், அவர்களது சக்திக்கேற்ப 10 நாள் வருவாயைக் கேட்கலாம். அரசு ஊழியர்களிடம் தங்களின் ஒரு வார ஊதியத்தைக் கேட்கலாம். நல்ல வேலைகளில் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் இருப் பவர்களிடம் ஐந்து நாள் ஊதியத்தைக் கேட்கலாம். நடுத்தர வர்க்க பாட்டாளிகளிடம் இரண்டு நாள் ஊதியத்தைக் கேட்கலாம். தினக்கூலிகளிடம் அவர்கள் விரும்பினால், அவர்கள் தரக்கூடிய ஒரு சிறிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், யாரையும் நிர்பந்தப்படுத்துவது கூடாது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. மனம் கசந்து யாரும் நமக்கு தேர்தல் நிதியளிக்க வேண்டியதில்லை.


நமது நிதிநிலை அறிந்து, சமுதாயத்தின் அரசியல் நிலை புரிந்து, மனமுவந்து யார் யார் தருகிறார்களோ அவர்களிடம் மட்டுமே தேர்தல் நிதியைத் திரட்டுங்கள். வீடு வீடாக செல்லுங்கள். வீதி வீதியாக செல்லுங்கள். உண்டியல் குலுக்கியாவது நிதி திரட்டுங்கள்.


நீங்கள் திரட்டும் ஒவ்வொரு ரூபாயும் சமுதாயத்தின் அரசியல் தலைநிமிர்வுக்கு, ஹலாலான முறையில் செலவு செய்யப்படும் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நமது எண்ணங்களையும், எதிர்பார்ப்பு களையும் அந்த வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு, வெற்றியை நல்க பிரார்த்திப்போம்.!


அன்புடன்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்



சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்; மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி


Thursday 17 February 2011


மனித நேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா கோவையில்...


கோவை மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கோவை நடந்தது... பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு கோவை சுந்தராபுரம் கடைவிதியில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் தலைமையில், மாவட்ட பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்புரையாக தமுமுக மாநிலத்தலைவர் போராசியர். டாக்டர் . எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசினர், மற்றும் தமுமுக, மமக, தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் தற்போதையா அரசியல் சுழ்நிலைகளை எடுத்து உரைத்தார். இதில் 1500 க்கு மேல் கலந்து கொண்டார்கள். மாலையில் கோவையில் கோட்டைமேடு, செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் மமக கட்சியின் பெயர் பலகை திறப்பு விழா, குறிச்சி நகரம் அலுவலகம் திறப்பு விழா நடந்தது


கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.கோவை கோட்டை மேட்டில் புதிய கட்டபட்டா அடுக்குமாடி குடியிருப்புயை இன்னும் அடிப்படை வசதி செய்து தரப்படதா நிலையில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்வையிட்டார். தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், அருகில் தமுமக மற்றும் மமக நிர்வாகிகள்.


செல்வபுரம், கரும்பு கடை, ஆத்துபாலம்,பகுதிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள்


                                                
                                                மாநிலத்தலைவர் எழுச்சியுரை




கோவை செய்யது யின் எழுச்சியுரை





பாபரி மஸ்ஜித் மீட்க கோரி டிசம்பர் - 6 ல் கோவையில் நடந்த மாநில பொது செயலாளர்கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் சூலூர் த மு மு க வினர்கள் கலந்து கொண்ட படங்கள்